Wednesday, February 29, 2012

சில கவிதைகள்




பந்து போல்
திரும்பி வரும்
என்பது தெரியாதவர்கள்
நிலைக் கண்ணாடிகள் மீது
கல் வீசுகிறார்கள்
.
ஆள்பாதி ஆடைபாதி
மற்றவருக்குத்தான்

எப்போதும்
ஆள்தான் எல்லாமே
மனசாட்சிக்கு.
.
சொல்லாத சொல்லுக்கு
விலையேதுமில்லை

அவதூறுகளை நீங்கள்
அள்ளி வீசும்போது தெரிகிறது

உங்கள் மொழியின்
விலையும்

என் மௌனத்தின்
மதிப்பும்
.
மனிதர்கள் வெறும்
மரங்களல்ல

காய்த்தால்
கல் வீசுவதற்கும்

காய்க்காவிட்டால்
வெட்டிச் சாய்ப்பதற்கும்
.
வரிசைகளை மீறி
நீண்டன கைகள்

உடலை வளர்த்தவன்
அறிவை வளர்க்கவில்லை.
-அசோகன் முத்துசாமி



No comments:

Post a Comment